ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

விரல் வழி கசியும் அமுதம் .


யானி - பெயர் சொல்லும் பொழுதே ஒரு உவகை ஊற்று உள்ளிருந்து ஓங்கி எழும்.
கிரீஸ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இப் போராளி , தன் ஏழ்மையை , தன் சுற்றத்தை , தன் காதலை , தன் விதியை தோற்கடித்து , நம் நெஞ்சத்துள் நீங்கா நின்ற சாமுராய் .

படைப்புக்கான ஒரு பொறி தட்டியவுடன் , ஊன் , உயிர் , உறக்கம் , உற்றார் , உலகம் ஒரு பொருட்டல்லவென , தானும் , தன் இசையும் , அது ஸ்ருஷ்ட்டிக்கும் தன் உலகுமாய் வாழும் ஓர் தனிமை துறவி . ஆயிரம் முறை , தன் கோர்த்த இசையை , தானே சூடி , மாற்றி , பின் கோர்த்து , பின் மீண்டும் சூடி , திருப்தியளித்த பின் நமக்கு சூட்டும் ஒரு பேதை கோதை .

"Yaani in words" - வார்த்தைகளால் விவரிக்க முடியா இ ப் பிரபஞ்ச சக்தியை , விவரிக்க முனையும் ஒரு முயற்சி.
http://www.amazon.com/Yanni-Words/dp/1401351948
தன் மகிழ்வை , தன் காதலை , தன் கண்ணீரை , தன் ஆற்றாமையை இசையாய் மாற்றி, தன்னை சமைத்து , நமக்கு பரிமாறும் ஒரு சிறு குறிப்பு தொண்டன் .தன் கடல் கிராமம் , பூகம்பத்தால் களவாட பட்ட பிறகு , தன் ஆற்றாமையை , தன் கண்ணீரை , தன் வாழ்வின் நிச்சய மற்ற தன்மையை உணர்த்த வந்த செவ்வியல் படைப்பே "Acroyali-Standing In Motion"

தன் மனதில் கட்டிய வாத்திய வியூகங்களை சரி பார்த்த பின் , உலகின் தலை சிறந்த வாத்திய இசை வீரர்களை தன் படையில் சேர்க்கும் சக்கரவர்த்தி .


படையின் தளபதி - "SAMVEL YERVINYAN"

தீரா காதலை , உண்டாக்கிய இரு படைப்புகள் "The Storm" மற்றும் "Nostalgia" .





The Storm - எனும் இசை கோர்வையில் "சாமுவேல்" நிகழித்தியிருகும் ஓர் படையெடுப்பு மிக பிரம்மாணடம் . வயோலா போன்ற இசையை கருவியின் ஊடாய் மெல்ல ஒரு ஒற்றர் படையும் காலட் படையும் மெதுவாய் தன் வலிகளை அரற்றி கொண்டு செல்ல , இரண்டாம் நிமிடத்தில் தொடங்கும் சாமுவேலின் குதிரை படை , தன் நெடிய கூர் வாளால் நொடி பொழிதில், கேட்கும் அத்தனை பேரின் உள்ளங்களை வெட்டி வீழ்த்தி , நம்மை கள் வெறியர் ஆக்குகிறது . முடிவிலா இப்போரில் , மற்ற வீரர் களுக்கும் வாய்ப்பளித்து பின்னர் "thrumpet" போன்ற யானை படை பின் தொடர ,தன் சுழல் வாளால் , நானே இங்கு எல்லாம் என சொல்லும் ஒரு தருனம் படைப்பின் உச்சம்.


மற்றுமொரு மறக்கவொண்ணா படைப்பு "Prelude and Nostalgia ".
"Storm" - ஒரு குதிரை படை வாள் வீரனின் கள் வெறி யாட்டம் என்றால் , இதில் தோல்வி யுற்ற ஒரு சமரின் நீங்கா வலிகளை , மயிலிறகால் வருடி , "மீண்டும் விடியல் வரும்" , " இதுவும் கடந்து போகும்" என உணர்த்தும் ஒரு ஞான உபதேசம்.




"Duduk" எனும் ஒரு Aremenian கருவியின் ஊடாய் ஒரு புத்த பிட்ச்சு இறந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கெல்லாம் மோட்சம் வழங்குவது போல , மெல்ல மயிர் பீலியால் நம்மை வருடு கின்றது . பின் தொடங்கு கிறது "சாமுவேலின் " கதறல் . போரில் தோற்றதால் , தன்னை தானே அழித்து கொள்ள முனையும் ஒரு சாமுராயின் ஓலம் . வயிற்ரை அறைந்து கொண்டு ஒளமிடும் ஒப்பாரி ,
இவ்வோளத்தை கேட்கும் Duduk என்னும் புத்த பிச்சு , கண்ணீர் மல்கி , வீரனின் புண்களுக்கு மருந்திடுகின்றார் . பின்பு யானி தன் பியானோ வின் மூலம் , முடிவிலா இப் பிரபஞ்சத்தில் எல்லாம் கடந்து போகும் என விரல் வழி கசியும் அமுதத்தை அனைவர்க்கும் பொழிகின்றார்.

Nostalgia - நம் நினைவலைகளில் நீங்கா குமிழ்களை உருவாக்கி செல்கிறது .

வெளியே பெரும் நிசப்தம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக