வெள்ளி, 22 ஏப்ரல், 2011

ஒளிக் கீற்று



இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

--- திருமூலர் (பத்தாம் திருமுறை - ஒன்பதாம் தந்திரம் - 15 - அற்புத கூத்து ).

மூளை - மனித உயிரின் எல்லா உள்கட்டமைப்பையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் சர்வதிகாரி . மனம் என்னும் தங்க கருவூலத்தை கனத்த பூட்டிட்டு , அதன் சாவியை நம்மிடமே தரும் மாயாவி . அள்ளி பருகுவோர் அறிவாளியாகவும் , முங்கி முத்தெடுப்போர் ஞானி யாகவும் , மூச்சடைத்து இறப்போர் பித்தனாகவும் ஆக்க செய்யம் பூதம் .

நவீன அறிவியல் - இடப்பக்க மூளையை ஒரு serial processor ( X86 போல் ) ஆகவும் , வலப்பக்க மூளையை parallel processor ( graphics processor ) ஆகவும்
உருவகப்படுத்து கின்றது ( ஆக நம் மூளை ஒரு fusion Architecture - Thanks to AMD ) நம் மொழி திறன் , ஆளுமை , திறனாய்வு , பகுப்பறிதல் , சீரமைப்பு , கட்டுப்பாடு இவ் வனைத்திற்கும் நம் இடப்பக்க மூளையே காரணி , இதை முறையே Language Interpretation , Instruction Decoding , Arithmetic , Logic Control போன்ற செயல் களோடு ஒப்பிட்டு கொள்ளலாம் . இக்கணம் நாம் உணரும் , நுகரும் , துய்க்கும் அனைத்திற்கும் காரணி நம் வல ப்பக்க மூளை - கிட்ட தட்ட இது ஒரு image rendering செயல் .

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த , நம் இந்திய மரபு - இதையே - அர்தநாரி தத்துவமாய் நம்மக்கு உபதேசி க்கின்றது . மொழி , ஆளுமை , நுண் உணர்வு போன்ற நம் இடப்பக்க மூளையின் செயல்களை பெண்ணாய் - சக்தியாய் உருவக படுத்துகிறது . இக்கணம் , இன் நொடி யின் செயல்களையே கடமையாய் கொண்ட வலப்பக்க மூளையை - ஆணாய் - சிவமாய் - இப்ப்ரபஜந்தின் நுழைவு வாயிலாய் - காட்டுகின்றது .


இதை ஒப்பு நோக்கும் விதமாய் , Jill Bolte Taylor என்னும் மூளை நரம்பியல் விஞ்ஞானி , இடப்பக்க மூளை செயல் இழந்ததன் விளைவாய் , தனக்கு ஏற்பட்ட "Out of Body experience" பற்றி விரிவாய் , சுவை பட கீழே காணும் கானொளியில் கதைக்கிறார்






முப்பதி ஏழு வயதான Taylor , ஒரு Harvard பட்டதாரி . எட்டு ஆண்டு களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட மூளை செயல் இழப்பும் , அதனால் தன்னுக்கு உண்டான , பிரபஞ்ச தொடர்பும் , நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன . மேலும் தகவல் அறிய Book: My Stroke of Insight
அவரை பொறுத்த வரை நாம் ஒவ்வொருவரும் , நம் வல பக்க மூளையால் , ஒருங்கிணைக்க பட்ட ஒளி கீற்றுகள் . நாம் ஒவ்வொருவரும் , நம் உள்ளகட்டமைபின் ஊடாய் , இப் பிரபஞ்ச சக்தியில் மூழ்கி முத்தெடுக்க முடியும் . நம் சைவ மரபோ இதையே , கடவுளாய் - சிவமாய் கற்பிக்கிறது . மாட்டு இடையனான திருமூலனோ Taylor சொல்வது போலே தன்னக்குள்ளே மூழ்கி , பிற உயிரில் தம்மை கண்டான் .


இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூட்டை போல் ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்


ஆக மொத்தம் நாம் ஒருவர் , நமக்குள் இருவர் !


-சிவகுமார்




ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

விரல் வழி கசியும் அமுதம் .


யானி - பெயர் சொல்லும் பொழுதே ஒரு உவகை ஊற்று உள்ளிருந்து ஓங்கி எழும்.
கிரீஸ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இப் போராளி , தன் ஏழ்மையை , தன் சுற்றத்தை , தன் காதலை , தன் விதியை தோற்கடித்து , நம் நெஞ்சத்துள் நீங்கா நின்ற சாமுராய் .

படைப்புக்கான ஒரு பொறி தட்டியவுடன் , ஊன் , உயிர் , உறக்கம் , உற்றார் , உலகம் ஒரு பொருட்டல்லவென , தானும் , தன் இசையும் , அது ஸ்ருஷ்ட்டிக்கும் தன் உலகுமாய் வாழும் ஓர் தனிமை துறவி . ஆயிரம் முறை , தன் கோர்த்த இசையை , தானே சூடி , மாற்றி , பின் கோர்த்து , பின் மீண்டும் சூடி , திருப்தியளித்த பின் நமக்கு சூட்டும் ஒரு பேதை கோதை .

"Yaani in words" - வார்த்தைகளால் விவரிக்க முடியா இ ப் பிரபஞ்ச சக்தியை , விவரிக்க முனையும் ஒரு முயற்சி.
http://www.amazon.com/Yanni-Words/dp/1401351948
தன் மகிழ்வை , தன் காதலை , தன் கண்ணீரை , தன் ஆற்றாமையை இசையாய் மாற்றி, தன்னை சமைத்து , நமக்கு பரிமாறும் ஒரு சிறு குறிப்பு தொண்டன் .தன் கடல் கிராமம் , பூகம்பத்தால் களவாட பட்ட பிறகு , தன் ஆற்றாமையை , தன் கண்ணீரை , தன் வாழ்வின் நிச்சய மற்ற தன்மையை உணர்த்த வந்த செவ்வியல் படைப்பே "Acroyali-Standing In Motion"

தன் மனதில் கட்டிய வாத்திய வியூகங்களை சரி பார்த்த பின் , உலகின் தலை சிறந்த வாத்திய இசை வீரர்களை தன் படையில் சேர்க்கும் சக்கரவர்த்தி .


படையின் தளபதி - "SAMVEL YERVINYAN"

தீரா காதலை , உண்டாக்கிய இரு படைப்புகள் "The Storm" மற்றும் "Nostalgia" .





The Storm - எனும் இசை கோர்வையில் "சாமுவேல்" நிகழித்தியிருகும் ஓர் படையெடுப்பு மிக பிரம்மாணடம் . வயோலா போன்ற இசையை கருவியின் ஊடாய் மெல்ல ஒரு ஒற்றர் படையும் காலட் படையும் மெதுவாய் தன் வலிகளை அரற்றி கொண்டு செல்ல , இரண்டாம் நிமிடத்தில் தொடங்கும் சாமுவேலின் குதிரை படை , தன் நெடிய கூர் வாளால் நொடி பொழிதில், கேட்கும் அத்தனை பேரின் உள்ளங்களை வெட்டி வீழ்த்தி , நம்மை கள் வெறியர் ஆக்குகிறது . முடிவிலா இப்போரில் , மற்ற வீரர் களுக்கும் வாய்ப்பளித்து பின்னர் "thrumpet" போன்ற யானை படை பின் தொடர ,தன் சுழல் வாளால் , நானே இங்கு எல்லாம் என சொல்லும் ஒரு தருனம் படைப்பின் உச்சம்.


மற்றுமொரு மறக்கவொண்ணா படைப்பு "Prelude and Nostalgia ".
"Storm" - ஒரு குதிரை படை வாள் வீரனின் கள் வெறி யாட்டம் என்றால் , இதில் தோல்வி யுற்ற ஒரு சமரின் நீங்கா வலிகளை , மயிலிறகால் வருடி , "மீண்டும் விடியல் வரும்" , " இதுவும் கடந்து போகும்" என உணர்த்தும் ஒரு ஞான உபதேசம்.




"Duduk" எனும் ஒரு Aremenian கருவியின் ஊடாய் ஒரு புத்த பிட்ச்சு இறந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கெல்லாம் மோட்சம் வழங்குவது போல , மெல்ல மயிர் பீலியால் நம்மை வருடு கின்றது . பின் தொடங்கு கிறது "சாமுவேலின் " கதறல் . போரில் தோற்றதால் , தன்னை தானே அழித்து கொள்ள முனையும் ஒரு சாமுராயின் ஓலம் . வயிற்ரை அறைந்து கொண்டு ஒளமிடும் ஒப்பாரி ,
இவ்வோளத்தை கேட்கும் Duduk என்னும் புத்த பிச்சு , கண்ணீர் மல்கி , வீரனின் புண்களுக்கு மருந்திடுகின்றார் . பின்பு யானி தன் பியானோ வின் மூலம் , முடிவிலா இப் பிரபஞ்சத்தில் எல்லாம் கடந்து போகும் என விரல் வழி கசியும் அமுதத்தை அனைவர்க்கும் பொழிகின்றார்.

Nostalgia - நம் நினைவலைகளில் நீங்கா குமிழ்களை உருவாக்கி செல்கிறது .

வெளியே பெரும் நிசப்தம் !

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உண்மத்தன்



உன் அருகாமையே , நீ தான் அவள் என உணர்த்திவிட ,
என் மன கசடுகள் அழிந்திடும் வேலையில் ,
உண்மத்தானாய் இடம் மறந்து , செயல் மறந்து ,
நானே நீயாய், நீயே நானாய் நின்ற இரு நொடி,
மீண்டும் இப் பூமி வந்து , இது கனவோ என மயங்கிடும் வேலையில் ,
இது கனவல்ல , இவள் அவளே என
தலையில் அடித்து சத்தியம் செய்தது கோவில் மணி ,
ஆம் மணி சொல்வது உண்மையே ,
அவளே இவள் என்ன வழிகாட்டி மரம் கை காட்ட ,
ஒட்டி கொண்டிருந்த கடைசி மன திரையும் விலகி உள்ளொளி பரவ
அங்கம் அங்கமாய் அழகு ,
என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
நர்த்தனம் , ஆலிங்கனம் , எல்லாம் என்னுல் நடந்தேறின
தேடி கண்டு கொண்டேன் , மனிதர் உணர்ந்து கொள்ளா காதலை !
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !