ஞாயிறு, 17 ஜூலை, 2011

Black Swan - உணர்வின் பூரண ஆகுதி !



"What You Think , You become" - Buddha




உணர்வின் பூரணம் (Perfection ) என்பது காலம், நிலை மறந்து "தான் "அது" வாதல்" . விளங்ககொன்ன இந்த பூரணத்தை ,பேசா பொருளை , படமாக்க முடியுமா ! , முடிந்தால் பார்வையாளனுக்கு இந்த பூரணத்தின் ஒரு விழுக்காடேனும் கிட்டுமா ?
கிட்டும் ! அந்த உன்னத பெரு முயற்சியே "Black swan " !

ரஷ்ய நாட்டார் கதையான " Lake of swans " ய் தழுவி இயக்கப்பட இந்த திரைப்படம் , பார்ப்பவரை வியப்பிலும் ,பரவசத்திலும் ஆழ்த்துகிறது !


ஒரு சாபத்தின் விளைவால் இளவரசி வெண் அன்னமாய்
உரு மாறி , தன் காதலனை தேடி செல்ல, நடுவே ஒரு வஞ்சக கரு அன்னம் , தன் கபடத்தால் , வெண் அன்னத்தையும் அதன் காதலனையும் பிரிக்கின்றது .கள்ளமற்ற வெண் அன்னம் , தன் காதலை நிரூபிக்க தன்னயே அழித்து கொள்கிறது ! . இந்த நாட்டார் கதை ஒரு செவ்வியல் தன்மையுடன் , "Ballet " நாட்டிய பின்ணணியில் அமைந்த ஒரு நாட்டிய நாடகம்.


இந்த வெண் அன்னம் , கருப்பு அன்னம் ஆகிய இரு வேறு பாத்திரங்களை ஒரே பெண் ஏற்று நடித்தால் , அவள் அந்த கதா பாத்திரங்கலாகவே மாறிவிட்டால் !,அவளுக்குள் நடக்கும் மன போராட்டங்களே "Black Swan ". சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு , சிக்கலான கதையையும் , இத்துணை நேர்த்தியான திரை கதையையும் , பிரமிப்பூட்டும் நடிப்பையும் கண்டதில்லை .

"Nina " வாக நடித்திருக்கும் Natalie தன் சிறகுகளால் இந்த மொத்த படத்தின் கருவை தாங்குகிறாள்.

"Ballet " நடனத்திர்க்காகவே தன் வாழ்வை அற்பணிக்கிறாள் "Nina ".அவள் லட்சியம் எப்படியாவது இந்த "White SWAN " மற்றும் "BLACK SWAN " பாத்திரங்களை ஏற்பது . நளினமும் , பெண்மையும் , கொண்ட அவளால் "White SWAN " பாத்திரத்தை மிக சிறப்பாய் நடிக்க முடிக்கிறது ! ஒழுங்கீனமும் ,கபடமும் கொண்ட " BLACK SWAN " பாத்திரத்தை அவளால் செய்யவே முடிவதில்லை !

இந்த கபடமும் , ஒழுங்கீனமும் அவள் வாழ்வில் குடி புகுந்தால், எது கதாபத்திரம் எது தன் சுயம் என பிரிக்க முடியாத கையறு நிலை நேர்ந்தால் ! அது தான் "BLACK SWAN "! .

Natalie Portman க்கு விருது கொடுத்து தனக்கு புகழ் சேர்த்து கொண்டது "ஆஸ்கார்" . நியாயமாய் பார்த்தால் இதன் இயக்குனர், திரை கதையாளர் அனைவரும் விருதுக்கு உரியவர்கள்.
கலையும் , கலைஞனும் ஒன்றாய் சங்கமிக்கும் தருணம் மிக அபூர்வம்.இன்றும் கூட "ஹிரண்ய வதம் " நாடகத்தில் வரும் நரசிம்ம வேடமிட்ட கலைஞர் ஒப்பனையின் போது , சம்பிரதாய திற்காக ஒரு திருஷ்டி பொட்டு வைத்து வருவார். இது தான் இன்னும் தரையில் தான் இருக்கிறோம் என்று அவருக்கு அவரே போட்டு கொண்ட விலங்கு !. எல்லா இலக்கிய வாதிகளும் இது பற்றி ஒரு கதையெனும் எழுதி இருப்பார்கள் . மரணத்தை பற்றி ஒரு இசை கோர்வை எழுதியதாலேயே மொசார்ட் நோய் பட்டு இறந்தார் என்றும் , மரணத்தை பற்றி ஒரு ஆசு கவி பாடியதாலேயே மகாகவி காளிதாஸ் இறந்தார் என்றம் கூறுவர் ,இது சத்தியமாய் இருக்க அணைத்து சாத்தியங்களும் உள்ளன !



தன்னை வேள்வியில் ஆகுதியாகி அது வேறு தான் வேறு அல்லாமல்"தானே அது வாதல் " மிக சொற்பம் . தவத்தை விட இது மேல் ஆனது . "BLACK SWAN " அப்படி ஒரு ஆகுதி யையும் , அதன் முன்னே நடக்கும் மன போரட்டங்கள் பற்றிய படம். தவற விடாதீர் !